கார் மீது லாரி மோதி மூதாட்டி பலி

ஓசூர், ஜூன் 18: ஓசூர் அடுத்த சானமாவு வனப்பகுதியில், கார் மீது லாரி மோதிய விபத்தில் கர்நாடக மாநிலத்தை சேர்ந்த மூதாட்டி உயிரிழந்தார். மேலும் 2 பேர் படுகாயமடைந்தனர். கர்நாடக மாநிலம், பெங்களூரு மாவட்டம் ஹெப்பல் ஆர்.டி. நகர் அருகில் குட்டஹள்ளி கிராமத்தை சேர்ந்தவர் கோதண்டராமன். இவரது மனைவி விஜயம்மா(61). கடந்த 14ம் தேதி இரவு, இவர்கள் குடும்பத்துடன் காரில் பெங்களூரு-கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலை சானமாவு வனப்பகுதியில் வந்து கொண்டிருந்தார்.

அப்போது அவ்வழியாக வந்த லாரி, மற்றொரு லாரியுடன் மோதியது. இதில் கட்டுப் பாட்டை இழந்த லாரி, காரின் மீது மோதியது. இந்த விபத்தில் விஜயம்மா பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும், காரை ஓட்டி வந்த அவரது மகன் ஸ்ரீநாத்(43), உறவினர் முனியப்பா (64) ஆகியோர் படுகாயமடைந்தனர். இதுகுறித்த தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், இருவரையும் மீட்டு ஓசூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். விஜயம்மா உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இதுகுறித்து அட்கோ போலீசார் வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தி
வருகின்றனர்.

The post கார் மீது லாரி மோதி மூதாட்டி பலி appeared first on Dinakaran.

Related Stories: