மார்க்சிஸ்ட் கம்யூ., கண்டன ஆர்ப்பாட்டம்

தர்மபுரி, ஜூன் 18: தர்மபுரி பிஎஸ்என்எல் அலுவலம் முன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் சிசுபாலன் தலைமை வகித்தார். சாதி மறுப்பு திருமணம் விவகாரத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருநெல்வேலி மாவட்ட குழு அலுவலகம் சூறையாடப்பட்டதை கண்டித்து இப்போராட்டம் நடைபெற்றது. மாவட்டசெயலாளர் குமார், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் நாகராசன், அருச்சுணன், கிரைசாமேரி, விசுவநாதன், மல்லிகா, சின்னசாமி, தனுசன், விசிக சார்பில் தொகுதி செயலாளர் கோட்டை கலைவாணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு பேசினர். நகர செயலாளர் முரளி நன்றி கூறினார்.

The post மார்க்சிஸ்ட் கம்யூ., கண்டன ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.

Related Stories: