மகளிர் சுயஉதவி குழுக்களுக்கு பயிற்சி

போச்சம்பள்ளி, ஜூன் 16: கிருஷ்ணகிரி மாவட்டம், மத்தூர் ஒன்றியம் கெரிகேப்பள்ளி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில், நபார்டு மைராடா நீர்வடிப்பகுதி திட்டத்தின் கீழ், மகளிர் சுய உதவி குழுக்களுக்கான விழிப்புணர்வு பயிற்சி மற்றும் நிலைத்த விவசாயத்திற்கான தொழில் முனைவு மேம்பாட்டு பயிற்சி நடைபெற்றது. மைராடா தொண்டு நிறுவனத்தின் திட்ட அலுவலர் முருகன், எத்திராஜ், கெம்பம்மாள், தமைமை ஆசிரியர் வீரமணி உள்ளிட்ட ஆசிரியர்கள் மற்றும் சுய உதவிக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

The post மகளிர் சுயஉதவி குழுக்களுக்கு பயிற்சி appeared first on Dinakaran.

Related Stories: