அடையாளம் தெரியாத முதியவர் உடல் மீட்பு

வி.கே.புரம், ஜூன்12: நெல்லை மாவட்டம், விக்கிரமசிங்கபுரம் பழைய பாபநாசம் சாலையில் தாமிரபரணி ஆற்றங்கரையோரம் சுமார் 60 வயது மதிக்கத்தக்க ஆண் உடல் கிடந்தது. இதுகுறித்து அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் விகே புரம் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். இதுகுறித்து அப்பகுதி விஏஓ ராஜா செந்தில்குமார் அளித்த புகாரின் பேரில் முதியவரின் உடலை மீட்டு நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். இறந்தவர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்? என்பது குறித்து வி.கே. புரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post அடையாளம் தெரியாத முதியவர் உடல் மீட்பு appeared first on Dinakaran.

Related Stories: