கூலி தொழிலாளி தற்கொலை

மானூர், ஜூன்12: மானூர் அருகே உள்ள உக்கிரன்கோட்டை மெயின் ரோடு பகுதியைச் சேர்ந்தவர் மணிமாறன் மகன் வினோத்குமார் (34). சிப்காட்டில் கூலி வேலை செய்துவந்தார். இவருக்கு திருமணமாகி மனைவி, குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் குடும்ப பிரச்னை காரணமாக வினோத்குமாரின் மனைவி தனது தந்தை வீட்டுக்கு சென்று விட்டார். இதனால் மன உளைச்சலில் இருந்த வினோத்குமார், நேற்று விஷம் குடித்து மயங்கிய நிலையில் வீட்டில் கிடந்துள்ளார். உறவினர்கள் அவரை மீட்டு நெல்லை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் இறந்தார். இதுகுறித்து மானூர் போலீசார் விசாரணை நடத்தினர்.

The post கூலி தொழிலாளி தற்கொலை appeared first on Dinakaran.

Related Stories: