இது மாணவர்களுக்கு உத்வேகத்தை அளிப்பதோடு, தொழில் நிறுவனங்களும் தங்களின் கேம்பஸ் இன்டர்வியூவை ஆண்டுக்கு 2 முறை நடத்தலாம். பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்புகளும் அதிகரிக்கும். ஏற்கனவே வெளிநாட்டு பல்கலைக்கழகங்கள் ஆண்டுக்கு இருமுறை மாணவர் சேர்க்கையை பின்பற்றி வருகின்றன. இந்திய உயர்கல்வி நிறுவனங்களும் இம்முறையை கொண்டு வருதன் மூலம், மாணவர்கள் பரிமாற்றத்தையும் சர்வதேச ஒத்துழைப்பையும் மேம்படுத்த முடியும். இதன் மூலம் நமது உலகளாவிய போட்டித்தன்மை மேம்படும். உலகளாவிய கல்வித் தரத்துடன் நாமும் இணைய முடியும். இரு முறை மாணவர் சேர்க்கை நடத்துவது பல்கலைக்கழகங்களுக்கும் உயர்கல்வி நிறுவனங்களுக்கும் கட்டாயமில்லை. இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
The post இந்திய பல்கலைக்கழகங்களில் 2 முறை மாணவர் சேர்க்கை 2 முறை கேம்பஸ் இன்டர்வியூ: ஜூலையில் தவற விட்டவர்கள் ஜனவரியில் சேர்ந்து படிக்கலாம் appeared first on Dinakaran.