புதூர் அருகே மெட்டில்பட்டி சந்தன மாரியம்மன் கோவில் மஹா கும்பாபிஷேக விழா

எட்டயபுரம், ஜூன் 10: புதூர் மேற்கு ஒன்றியம் மெட்டில்பட்டி சந்தன மாரியம்மன் கோயில் மஹா கும்பாபிஷேக விழா சிறப்பாக நடந்தது. அதில் மார்க்கண்டேயன் எம்எல்ஏ கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தார்.நிகழ்வில் புதூர் மேற்கு ஒன்றிய செயலாளர் மும்மூர்த்தி, புதூர் மத்திய ஒன்றிய செயலாளர் ராதாகிருஷ்ணன், ஒன்றிய அவைத்தலைவர் பொன்ராஜ், ஒன்றிய துணைச்செயலாளர் ரவி, வெம்பூர் ஊராட்சி தலைவர் ராஜேஸ்வரி, கிளைச் செயலாளர்கள் ஜெயசக்தி, ஜெயக்குமார், சுப்பையா, கட்சி உறுப்பினர் மருதுப்பாண்டியன், விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் தர் உட்பட நிர்வாகிகள், கிராம பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

The post புதூர் அருகே மெட்டில்பட்டி சந்தன மாரியம்மன் கோவில் மஹா கும்பாபிஷேக விழா appeared first on Dinakaran.

Related Stories: