ஆண்டிபட்டி மாணவர்களுக்கு பாராட்டு

 

ஆண்டிபட்டி, ஜூன் 8: தேனி மாவட்டம், ஆண்டிபட்டி ஒன்றியத்தில் உள்ள 11 மாணவர்கள் கோவை எஸ்.என்.எஸ் கல்லூரியில் நடந்த உலக சிலம்பம் போட்டியில் தங்கம் உள்ளிட்ட பதக்கங்களை பெற்றதற்காக ஆண்டிபட்டி அருகே உள்ள கன்னியப்பிள்ளைபட்டி பயிற்சி மையத்தில் பாராட்டு விழா நடைபெற்றது.

விழாவிற்கு தொழிலதிபர் திருமுருகன் தலைமை தாங்கி வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு மாலை அணிவித்து பாராட்டு தெரிவித்தார். அவர்களை பயிற்றுவித்த பயிற்சியாளர்களுக்கு பொன்னாடை போர்த்தி கௌரவித்தார். இந்நிகழ்ச்சிக்கு தேனி மாவட்ட அமைச்சூர் கிக் அசோசியேசன் செயலாளர் துரைமுருகன் முன்னிலை வகித்தார் .பயிற்சியாளர் ஆனந்த வேல்முருகன் வரவேற்று பேசினார். விழாவில் மாணவ, மாணவிகள் சிலம்பம் ஆடி தங்கள் திறமையை வெளிப்படுத்தினர்.

 

The post ஆண்டிபட்டி மாணவர்களுக்கு பாராட்டு appeared first on Dinakaran.

Related Stories: