92 மனுக்கள் பெறப்பட்டன புதுக்கோட்டையில் 28ம்தேதி விவசாயிகள் குறைதீர் கூட்டம்

 

புதுக்கோட்டை, ஜூன் 21: புதுக்கோட்டை மாவட்டத்தில் ஜூன் 2024ம் மாதத்திற்கான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வரும் 28ம் தேதி (வெள்ளிக்கிழமை) காலை 10.30 மணியளவில் புதுக்கோட்டை கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் தலைமையில் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் பல்வேறு துறை அரசு அலுவலர்கள் கலந்து கொண்டு விவசாயிகளின் விவசாயம் சம்பந்தப்பட்ட கோரிக்கைகளுக்கு பதில் அளிக்க உள்ளார்கள்.

எனவே, புதுக்கோட்டை மாவட்ட விவசாயிகள் இக்கூட்டத்தில் கலந்து கொண்டு தங்களது பயிர் சாகுபடிக்கு தேவையான நவீன தொழில்நுட்பங்கள், வேளாண் இடுபொருள் இருப்பு விவரங்கள் மற்றும் வேளாண் உழவர் நலத்துறை மூலம் செயல்படுத்தப்படும் மானிய திட்டங்கள் குறித்து தெரிந்துக்கொள்வதுடன், விவசாயம் தொடர்புடைய கோரிக்கைகளை மட்டும் தெரிவித்து பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. மேற்கண்ட தகவலை கலெக்டர் மெர்சி ரம்யா, தெரிவித்துள்ளார்.

The post 92 மனுக்கள் பெறப்பட்டன புதுக்கோட்டையில் 28ம்தேதி விவசாயிகள் குறைதீர் கூட்டம் appeared first on Dinakaran.

Related Stories: