ஆனால் அதற்கு பணம் கொடுக்காமல் கடை உரிமையாளர் அசீமை கடுமையாக தாக்கி உள்ளனர். கடையில் இருந்த அவசர தீயணைப்பான் கருவி மற்றும் கட்டைகளை கொண்டு பொருட்களை அடித்து நொறுக்கிவிட்டு தப்பி ஓடிவிட்டனர். இந்த மோதலில் காயமடைந்த கடை உரிமையாளரை அருகில் இருந்தவர்கள் மீட்டு கண்ணமங்கலம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதித்தனர். இதை அடுத்து வியாபாரி அசீம் கொடுத்த புகாரின் பேரில் காணாமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தாக்குதல் நடத்திய 7 பேர் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
The post திருவண்ணாமலை அருகே பட்டாசு கடை உரிமையாளர் மீது மர்ம நபர்கள் தாக்குதல்: சிசிடிவி காட்சிகளை வைத்து 7 பேரை தேடும் போலீசார் appeared first on Dinakaran.