அவர்கள் சென்று கதவை தட்டி பார்த்தனர். ஆனால் கதவு திறக்கவில்லை. இதனையடுத்து மாரிமுத்துவின் தம்பி சந்தானம் உள்ளிட்டோர் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அப்போது ரேவதி ஆடைகள் இல்லாமல் இறந்து கிடந்தார். தகவல் அறிந்து வந்த போலீசார் ரேவதி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வேடசந்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். ரேவதி குளித்துவிட்டு வரும்போது தடுமாறி கீழே விழுந்து மூக்கில் அடிபட்டு உயிரிழந்திருக்கலாம் என போலீசார் தெரிவித்தனர்.
The post பூட்டிய வீட்டிற்குள் இந்து முன்னணி நிர்வாகி மனைவி மர்மச்சாவு appeared first on Dinakaran.