பல்வேறு குழப்பங்களுடன் ராமநாதபுரம் தொகுதி தேர்தல் நடந்து முடிந்த நிலையில் தேர்தல் முடிவுகள் நாளை வெளியாகிறது. இந்நிலையில் ஓ.பன்னீர்செல்வம் தனது குலதெய்வமான விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள செண்பகத்தோப்பு பேச்சியம்மன் கோயிலில் நேற்று சுவாமி தரிசனம் செய்தார். தனது தேர்தல் சின்னமான பலாப்பழத்தை வைத்து சிறப்பு பூஜைகள் செய்தார். தேர்தல் முடிவு தனக்கு சாதகமாக வெளிவர வேண்டும் என ஓபிஎஸ் வழிபாடு நடத்தியதாக கூறப்படுகிறது.
The post செண்பகத்தோப்பு குலதெய்வம் கோயிலில் தேர்தல் சின்னம் பலாப்பழத்தை வைத்து ஓபிஎஸ் சிறப்பு வழிபாடு: தேர்தல் முடிவு நாளை வெளியாவதால் பூஜை appeared first on Dinakaran.