டூவீலரில் இருந்து விழுந்தவர் பலி

 

தொண்டி, ஜூன் 2: தொண்டி அருகேயுள்ள எஸ்பி.பட்டினம் அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் முனியசாமி (47). இவர் நேற்று முன்தினம் அப்பகுதியில் டூவீலரில் செல்லும் போது நிலை தடுமாறி கீழே விழுந்துள்ளார். இதில் படுகாயமடைந்த அவரை மீட்டு ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி முனியசாமி நேற்று இறந்தார். இதுகுறித்து எஸ்பி.பட்டினம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

The post டூவீலரில் இருந்து விழுந்தவர் பலி appeared first on Dinakaran.

Related Stories: