இருவரும் மாறி, மாறி முன்னிலைப் பெற்றனர். முடிவில் கரோலினா 22-20 என்ற புள்ளிக் கணக்கில் 3வது செட்டையும் வசப்படுத்தினார். அதனால் ஒரு மணி 8 நிமிடங்கள் நீண்ட ஆட்டத்தில் சிந்து வெளியேற, கரோலினா 2-1 என்ற செட்களில் வென்று காலிறுதிக்கு முன்னேறினார். ஆண்கள் ஒற்றையர் பிரிவு 2வது சுற்று ஒன்றில் இந்தியாவின் எச்.எஸ்.பிரணாய்(31வயது, 10வது ரேங்க்), ஜப்பானின் கென்டா நிஷிமோடோ(29வயது, 11வது ரேங்க்) ஆகியோர் களம் கண்டனர்.
அந்த ஆட்டத்திலும் நிஷிமோடோ 21-13, பிரணாய் 21-14 என்ற புள்ளிக்கணக்கில் ஆளுக்கொரு செட்டை வசப்படுத்தினர். அதனால் 3வது செட்டில் வெற்றிப் பெற 2 வீரர்களும் மல்லுக்கட்டினர். கடைசி செட்டின் ஆரம்பத்தில் பிரணாய் முன்னிலைப் பெற்றார். ஆனால் கடுமையாக போராடிய நிஷிமோடோ அந்த செட்டையும் 21-15 என தனதாக்கினார்.
அதனால் ஒரு மணி 18 நிமிடங்கள் நீண்ட ஆட்டத்தை 1-2 என்ற செட்களில் பிரணாய் போராடி இழந்தார். முதல் சுற்றிலேயே பல இந்திய வீரர்கள், வீராங்கனைகள் தோல்வியை சந்தித்தனர். எஞ்சி சிந்து, பிரணாய் ஆகியோரும் நேற்று வெளியேற, சிங்கப்பூர் ஓபனில் இந்தியர்களின் ஆட்டம் 2வது சுற்றுடன் முடிந்தது.
The post சிங்கப்பூர் பேட்மின்டன் ஓபன் வெளியேறினர் சிந்து, பிரணாய் appeared first on Dinakaran.