இந்திய அணியில் அனைத்து வீரர்களுக்கும் முக்கியத்துவம்: கேப்டன் ரோகித்சர்மா பேட்டி

நியூயார்க் : இந்திய அணி கேப்டன் ரோகித்சர்மா கூறியதாவது:- கேப்டனாக எனக்கு இருக்கும் மிகப்பெரிய சவாலே பலவிதமான வீரர்களை எப்படி கையாள்வது என்பதில் தான் உள்ளது. ஒவ்வொரு வீரருக்கும் ஒவ்வொரு மன ஓட்டம் இருக்கும். ஒவ்வொரு வீரர்களும் ஒவ்வொரு விஷயத்தை எதிர்பார்ப்பார்கள்.

அதனை அவர்களிடமிருந்து கேட்டு அதற்கு ஏற்ப நான் செயல்பட வேண்டும். மேலும் அனைத்து வீரர்களையும் சரிசமமாக நடத்த வேண்டும். அனைவருக்கும் ஒரே விதமான முக்கியத்துவத்தை கொடுக்க வேண்டும். அப்போதுதான் இந்த அணியில் நாமும் ஒரு அங்கம் என்ற உணர்வு ஒவ்வொரு வீரருக்கும் வரும் என்றார்.

The post இந்திய அணியில் அனைத்து வீரர்களுக்கும் முக்கியத்துவம்: கேப்டன் ரோகித்சர்மா பேட்டி appeared first on Dinakaran.

Related Stories: