அழகுக்கு மெருகேற்றும் வளையல்கள்!

நன்றி குங்குமம் தோழி

கைகளின் அழகு பெண்களின் அழகிற்கு மேலும் மெருகேற்றுவதாக இருக்கும். இதை மனதில் கொண்டு கைகளில் அணியும் வளையல்களை தேர்ந்தெடுத்து அணிந்து கொண்டால் வனப்பாக வலம் வரலாம்.

* உடுத்தும் ஆடையின் அமைப்பு, அதன் நிறம் ஆகியவற்றை மனதில் கெண்டு அதற்கேற்ப வளையல்கள் அணிந்து கொண்டால் எழிலான தோற்றத்தை அளிக்கும்.

* குள்ளமான உடல் அமைப்பைப் பெற்ற பெண்கள், நல்ல பட்டையான அமைப்புடன் கூடிய வளையல்களையே அணிய வேண்டும். மெல்லிய வளையல்களாக இருந்தால் குறைந்தபட்சம் ஒவ்வொரு கையிலும் இரண்டு வளையல்களை அணிந்தால்தான் பார்வையாக இருக்கும்.

* விதவிதமான கண்ணாடி, பிளாஸ்டிக் வளையல்கள் மலிவு விலையில் கிடைக்கின்றன. இவற்றை வாங்கி அணியலாம்.

* திருமணம் போன்ற குடும்ப விழாக்களில் கலந்து கொள்ளச் செல்லும் போது தங்கத்தினால் ஆன வளையல்களை அணியலாம். நல்ல கவர்ச்சிகரமாக இருக்கும். அப்படி அணிந்து கொள்ள இயலாதவர்கள் தங்கம் போன்ற தோற்றத்துடன் அமைந்துள்ள பிளாஸ்டிக் அல்லது கண்ணாடி வளையல்களை அணியலாம்.

* உடுத்திக் கொள்ளும் புடவையின் வண்ணத்துக்கு பொருந்தும் வண்ணத்தில் அணியலாம். கண்ணாடி வளையல்களை அணிந்தால், அது எழுப்பும் கலகலவென்ற ஓசையே ஒரு தனி அழகுதான்.

* ஆலயங்களுக்குச் செல்லும் போது எளிமையான தோற்றமுடைய மெல்லிய பிளாஸ்டிக் அல்லது கண்ணாடி வளையல்களை அணிவது நல்ல தோற்றத்தைக் கொடுக்கும்.

* மங்கலம் தரும் வளையல்களை அணிவோம்… வசீகரத்துடன் காட்சி தருவோம்.

– எஸ்.நளினி பவானி, திண்டுக்கல்.

The post அழகுக்கு மெருகேற்றும் வளையல்கள்! appeared first on Dinakaran.

Related Stories: