உணவுப் பொருட்களில் பூச்சி வராமல் இருக்க வேண்டுமா?

நன்றி குங்குமம் தோழி

*பருப்புகளில் பெருங்காயத்தைத் தட்டிப்போட்டு வைத்தால் பூச்சிகள் வராது.

*அரிசியில் மிளகாய்வற்றல் சிலவற்றைப் போட்டு வைத்தால் வண்டு வராது.

*உளுத்தம் பருப்பை வாங்கியதும் அதை முறத்தில் போட்டு தட்டினால் மாவு மாதிரியான பொருள் வெளியேறும். தட்டிய பிறகு டப்பாவில் வைத்தால் வண்டு வராது.

*துவரம் பருப்பு மற்றும் உளுத்தம் பருப்பில் பூச்சி வராமல் இருக்க காய்ந்த வேப்பிலைகளையும், வசம்புத் துண்டுகளையும் போட்டு வைத்தால் போதும். உளுத்தம் பருப்புகளில் மஞ்சள் தூளும், உப்பும் கலந்து வைக்கலாம்.

*மிளகாய் பொடியில் வண்டு வராமல் இருக்க, துணியில் சிறிது பெருங்காயத் துண்டை வைத்து மூட்டையாகக் கட்டி மிளகாய்பொடி டப்பாவில் போட்டு வைத்தால் வண்டுகள் வராது.

*பிரியாணி அரிசியில் சிறிதளவு உப்புத்தூள் கலந்து, நிழலில் உலர்த்தி பத்திரப்படுத்தினால் வண்டுகள், பூச்சிக் கூடுகள் பிடிக்காது.

*மைதா, ரவா டப்பாக்களில் கல் உப்பை ஒரு துணியில் முடிந்து போடலாம். உலர்ந்த வேப்பிலை போடலாம்.

கசக்காது. புழு பூச்சி வராது. சுக்குத்தூளும் தூவலாம்.

*கோதுமை உள்ள பாத்திரத்தில் ஒரு கொத்து வெந்தயக் கீரையை போட்டு வைத்தால் பூச்சிகள் வராது.

*தனியா டப்பாவில் 4 முதல் 5 துண்டுகள் அடுப்புக்கரியை போட்டு வைத்தால் வண்டுகள் வராமல் இருக்கும்.

*புளியை வாங்கி வந்ததும், அதிலுள்ள கொட்டைகளையும், நார்களையும் நீக்கிவிட்டு நன்கு வெயிலில் காயவிட்டு, சிறிது கல் உப்பு சேர்த்து ஜாடியில் அடைத்துவிட்டால் ஓர் ஆண்டுக்கு மேல் புழுக்கள், பூச்சிகள் வராமல் இருக்கும்.

*பயறு மற்றும் தானியங்களில் வேகமாக வண்டு விழும். அந்த டப்பாக்களில் பூண்டையோ, மஞ்சள் துண்டையோ அல்லது வசம்புப் பொடியையோ கலந்து வைத்தால் சீக்கிரம் வண்டு பிடிக்காது.

*சர்க்கரை மற்றும் இனிப்பு வகைகளில் எறும்பு வராமலிருக்க கொஞ்சம் கிராம்புகளை அதில் போட்டு வைத்தால் போதும்.

*காய்ந்த எலுமிச்சை, ஆரஞ்சுத் தால்களை அலமாரியில் வைத்தால் பூச்சிகள் அணுகாது. காய்கறி மற்றும் பழங்களை சிறிதளவு வினிகர் கலந்த குளிர்ந்த நீரில் ஒரு சில நிமிடங்கள் போட்டு வைத்தால் கிருமிகள் இறந்து விடும்.

*எள் டப்பாவில் சிறிது நெல்லைப்போட்டு வைத்தால் பூச்சிகள் வராது.

*பூண்டில் புழு வராமல் இருக்க அதில் கேழ்வரகை சிறு மூட்டையாக கட்டிப் போடலாம்.

*சமையல் அறையில் உள்ள அலமாரியில் வேப்பிலைகளை பரப்பி அதன் மீது பேப்பர் போட்டு மளிகை பொருட்களை வைத்தால் பூச்சி வராமல் தடுக்கலாம்.

– கவிதா சரவணன், ஸ்ரீரங்கம்.

The post உணவுப் பொருட்களில் பூச்சி வராமல் இருக்க வேண்டுமா? appeared first on Dinakaran.

Related Stories: