கைவினைஞர் பயிற்சி திட்டத்தின் கீழ் தொழிற்பயிற்சி நிலையங்களில் மாணவர் சேர்க்கை: கலெக்டர் தகவல்

 

திருவள்ளூர், மே 25: கைவினைஞர் பயிற்சி திட்டத்தின் கீழ் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அரசினர் தொழிற்பயிற்சி நிலையங்கள் மற்றும் தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களில் 2024 – 2025ம் கல்வியாண்டிற்க்கான பயிற்சியாளர்கள் சேர்க்கை தற்போது நடைபெற்று வருகிறது. மாணவர்கள் www.skilltraining.tn.gov.in என்ற இணையதளம் மூலமாகவோ அல்லது தொழிற்பயிற்சி நிலையங்களில் நேரடியாகவோ விண்ணப்பிக்க ஜூன் மாதம் 7ம் தேதி கடைசி நாளாகும்.

இதில் 8ம் வகுப்பு மற்றும் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவியர்கள் ஓராண்டு மற்றும் 2 ஆண்டு பயிற்சியில் சேர்ந்து உடனடி வேலைவாய்ப்பு பெற்று பயனடையலாம். மேலும், அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் பயிற்சி முற்றிலும் இலவசமாக வழங்கப்படுகிறது. அதுமட்டுமின்றி இலவச மிதிவண்டி, காலணிகள், பாடப்புத்தகம், வரைபட உபகரணங்கள், சீருடைகள், சீருடைகளுக்கான தையற் கூலி மற்றும் மாதாந்திர உதவித்தொகையாக ரூ.750 புதுமைப்பெண் திட்டத்தின் கீழ் அரசு பள்ளிகளில் பயின்ற மாணவியர்களுக்கு மாதம் ரூ.1000 உதவித் தொகையாக வழங்கப்படுகிறது.

மேலும், இது தொடர்பான விவரங்களை தெரிந்துக்கொள்ள உதவி இயக்குநர், மாவட்ட திறன் பயிற்சி அலுவலகம், திருவள்ளூர் அவர்களை நேரிலோ அல்லது ricentreambattur@gmail.com என்ற மின்னஞ்சலிலோ அல்லது 9444224363, 9486939263 மற்றும் 9444139373 என்ற கைபேசி எண்ணிலோ தொடர்பு கொண்டு தொழிற்பயிற்சி நிலையங்களில் சேர்ந்து பயனடையுமாறு திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் த.பிரபுசங்கர் தெரிவித்துள்ளார்.

The post கைவினைஞர் பயிற்சி திட்டத்தின் கீழ் தொழிற்பயிற்சி நிலையங்களில் மாணவர் சேர்க்கை: கலெக்டர் தகவல் appeared first on Dinakaran.

Related Stories: