பாலியல் வன்கொடுமை வழக்கில் சிக்கியுள்ள பிரஜ்வல் ரேவண்ணாவின் பாஸ்போர்ட்டை முடக்கக் கோரி வெளியுறவுத்துறைக்கு எஸ்ஐடி கடிதம்!!

பெங்களூரு :பாலியல் வன்கொடுமை வழக்கில் சிக்கியுள்ள பிரஜ்வல் ரேவண்ணாவின் பாஸ்போர்ட்டை முடக்கக் கோரி வெளியுறவுத்துறைக்கு எஸ்ஐடி கடிதம் எழுதியுள்ளது. பிரஜ்வலின் பாஸ்போர்ட்டை உடனடியாக முடக்க உத்தரவு பிறப்பிக்க கோரி சிறப்பு புலனாய்வு குழு அதிகாரிகள் வெளியுறவுத்துறைக்கு கடிதம் அனுப்பியுள்ளனர். மதச்சார்பற்ற ஜனதா தள ஹாசன் எம்.பி. பிரஜ்வலின் ஆயிரக்கணக்கான ஆபாச வீடியோக்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது நினைவுகூரத்தக்கது.

The post பாலியல் வன்கொடுமை வழக்கில் சிக்கியுள்ள பிரஜ்வல் ரேவண்ணாவின் பாஸ்போர்ட்டை முடக்கக் கோரி வெளியுறவுத்துறைக்கு எஸ்ஐடி கடிதம்!! appeared first on Dinakaran.

Related Stories: