இந்த நிலையில் வனப்பகுதியில் இருந்து வெளியேறிய ஒற்றை காட்டு யானை துடியலூர் அடுத்த பாப்பநாயக்கன்பாளையம் பகுதிக்கு வந்தது. அங்கிருந்த குணசேகரன் என்பவரின் தோட்டத்திற்குள் சென்று பிளிற ஆரம்பித்தது. இந்த சத்தம் கேட்டு வீட்டிற்குள் இருந்தவர்கள் ஜன்னல் வழியாக பார்த்தபோது காட்டு யானை வெளியே நிற்பது தெரியவந்தது. அவர்கள் பாதுகாப்பாக வீட்டுக்குள் பத்திரமாக பதுங்கி கொண்டனர்.
இதற்கிடையே காட்டு யானையை பார்த்ததும் அங்கிருந்த நாய்கள் குரைக்க தொடங்கியதால் வீட்டை சுற்றி சுற்றிவந்தது. அங்கிருந்த அரிசி மூட்டையை கிழித்து தின்றுவிட்டு தூக்கிவீசி சேதப்படுத்தியது. தொடர்ந்து அந்த யானை வீட்டின் அருகே நிறுத்தப்பட்டு இருந்த டிராக்டரில் ஏதாவது உணவு கிடைக்குமா? என தும்பிக்கைவிட்டு பார்த்தது. அங்கு ஒன்றும் கிடைக்காததால் ஏமாற்றத்துடன் சிறது நேரம் சுற்றி திறிந்து விட்டு மீண்டும் காட்டுக்குள் திரும்பி சென்றுவிட்டது.இந்த காட்சிகள் அவரது வீட்டில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகியது. தற்போது அந்த காட்சிகள் வலைத்தில் வைரலாகி வருகிறது.
The post துடியலூர் அருகே டிராக்டரில் உணவு தேடிய ஒற்றை காட்டு யானை: சிசிடிவி காட்சி வைரல் appeared first on Dinakaran.