இந்த மனுவை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் விசாரித்தார். மருத்துவ ஆணையம் தரப்பில், மனுதாரர் இந்தியாவில் நீட் தேர்வை எழுதவில்லை. சேரும் போது 17 வயது பூர்த்தியாகவில்லை என வாதிடப்பட்டது. மனுதாரர் வக்கீல் ராம்சுந்தர்விஜய்ராஜ் ஆஜராகி, ‘‘வெளிநாட்டில் மருத்துவம் படிக்கவும் நீட் தேர்வு எழுத வேண்டும் என்பது மனுதாரர் சேர்ந்த பிறகு தான் அமலானது. எனவே, மனுதாரருக்கு அந்த உத்தரவு பொருந்தாது. வயதில் 12 நாள்கள் தான் குறைவு. ஆனால், பிளஸ் 2 முடித்த பிறகு முறையாக 6 ஆண்டு மருத்துவ படிப்பை முடித்துள்ளார். எனவே, அவருக்கு நிபந்தனைகள் பொருந்தாது’’ என்றார்.
இதையடுத்து நீதிபதி, மனுதாரர் பிளஸ் 2 முடித்த பிறகு, முறையாக 6 ஆண்டு மருத்துவ படிப்பை முடித்துள்ளார். எனவே, அவரது படிப்பை நிராகரிக்க முடியாது. மனுதாரரைப் போன்று வயதில் சில நாட்கள் குறைவாக இருந்தவர்கள் சிலருக்கு வேறு மாநிலங்களில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அது மனுதாரருக்கும் பொருந்தும். நீட் தேர்வு என்பது மனுதாரருக்கு பொருந்தாது. எனவே, ஸ்கிரீனிங் சோதனைக்கு விண்ணப்பித்த மனுதாரரின் விண்ணப்பத்தை நிராகரித்த உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. தேசிய மருத்துவ ஆணைய செயலாளர் மனுதாரருக்கு உடனடியாக தகுதிச் சான்றும், ஹால் டிக்கெட் வழங்கி ஸ்கிரீனிங் சோதனைக்கு அனுமதி வழங்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.
The post உக்ரைனில் எம்பிபிஎஸ் முடித்தவருக்கு தகுதிச்சான்று: தேசிய மருத்துவ ஆணையத்திற்கு ஐகோர்ட் கிளை உத்தரவு appeared first on Dinakaran.