நகைப்பட்டறையில் பணிபுரிந்த 8 குழந்தை தொழிலாளர்கள் மீட்பு: உரிமையாளர்கள் மீது வழக்குப்பதிவு

தண்டையார்பேட்டை: சென்னை வால்டாக்ஸ் சாலையில் உள்ள நகை பட்டறைகளில் குழந்தை தொழிலாளர்கள் பணிபுரிவதாக தொழிலாளர் நலத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து அந்த நகை பட்டறைகளை சோதனை செய்தபோது, அங்கு மேற்கு வங்கத்தை சேர்ந்த 7 சிறுவர்கள், ஒடிசாவை சேர்ந்த ஒரு சிறுவன் என 8 பேர் பணியில் இருந்தது தெரிய வந்தது. இவர்களுக்கு 14 முதல் 17 வயது வரை இருக்கும். அவர்களை மீட்டு ராயபுரத்தில் உள்ள குழந்தைகள் காப்பகத்தில் ஒப்படைத்தனர். குழந்தை தொழிலாளர்களை பணியில் அமர்த்திய நகைப்பட்டறை உரிமையாளர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

The post நகைப்பட்டறையில் பணிபுரிந்த 8 குழந்தை தொழிலாளர்கள் மீட்பு: உரிமையாளர்கள் மீது வழக்குப்பதிவு appeared first on Dinakaran.

Related Stories: