அப்போது, மருந்துகடை வாசலில் சாவியுடன் ஸ்கூட்டியை நிறுத்திய ஜெயபாலனின் அருகே மற்றொரு இருசக்கர வாகனத்தில் வந்த ஹெல்மெட் அணிந்த மர்ம ஆசாமி ஒருவர் அருகே உள்ள கடையில் சென்று முகவரியை கேட்டுள்ளார்.
அப்போது, மற்றொரு ஹெல்மெட் அணிந்த நபர் ஜெயபாலனின் ஸ்கூட்டியில் இருந்த சாவியை எடுத்து வாகனத்தின் டிக்கியில் இருந்த ரூ.2 லட்சத்தை திருடி கொண்டு அங்கிருந்து தப்பித்து சென்றது தெரிய வந்தது. எனவே போலீசார் இது குறித்து வழக்கு பதிவு செய்து ஜெயபாலன் வங்கியில் இருந்து பணம் எடுப்பதை மர்ம நபர்கள் பின் தொடர்ந்து வந்து, தெரிந்து கொண்டு திட்டமிட்டு திருட்டை அரங்கேற்றி உள்ளது தெரிய வந்து. இதனை தொடர்ந்து, டிஎஸ்பி கிரியோசக்தி தலைமையில் தனிப்படை அமைத்து மர்ம நபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.
The post ஓய்வு பெற்ற அஞ்சல்துறை ஊழியரின் ஸ்கூட்டியில் வைத்திருந்த ரூ.2 லட்சம் திருட்டு appeared first on Dinakaran.