வேளாண் இடுபொருள் ஓராண்டு பட்டயப் படிப்பு

பாப்பாரப்பட்டி, மே 16: பென்னாகரம் வட்டம், பாப்பாரப்பட்டி அறிவியல் வேளாண் நிலையத்தில், ஓராண்டு வேளாண் இடுபொருள் பட்டய படிப்பு, 2024-25ம் கல்வி ஆண்டு நடத்தப்பட உள்ளது. இந்த வகுப்பு சனி மற்றும் ஞாயிறுக்கிழமை ஆகிய 2 நாட்கள் பாப்பாரப்பட்டி வேளாண் அறிவியல் நிலையத்தில் நடத்தப்படும். சேர்க்கை கட்டணமாக ₹25,100 செலுத்தவேண்டும். 18 வயது பூர்த்தியான 10ம் வகுப்பு தேர்ச்சி மற்றும் தேர்ச்சி பெறாதவர்கள் சேர தகுதி ஆகும். பயிற்சி முடித்தவர்கள் சுயமாக உரக்கடை தொடங்கலாம். தங்களின் பெயரை முன்பதிவு செய்து, விண்ணப்பிக்கும் முறையை தெரிந்து கொள்ளலாம். இவ்வாறு அதிகாரி தெரிவித்துள்ளார்.

The post வேளாண் இடுபொருள் ஓராண்டு பட்டயப் படிப்பு appeared first on Dinakaran.

Related Stories: