சிபிஎஸ்இ பிளஸ் 2 பொதுத்தேர்வில் ட்ரஷர் ஐலண்ட் பள்ளி 100 சதவீதம் தேர்ச்சி

செங்கோட்டை,மே 14: செங்கோட்டை ட்ரஷர் ஐலண்ட் பள்ளியில் 2023- 24ம் கல்வி ஆண்டிற்கான பன்னிரண்டாம் வகுப்பு சிபிஎஸ்ஐ பொதுத் தேர்வை முதல் முறையாக எழுதினர். இதில் அனைத்து மாணவ மாணவிகளும் நல்ல மதிப்பெண்களுடன் 100 சதவீதம் தேர்ச்சி பெற்று சாதனை படைத்தனர். மேலும் 10ம் வகுப்பு சிபிஎஸ்இ பொதுத்தேர்வு எழுதிய மாணவ, மாணவிகள் பாடவாரியாக தமிழில் 99%, ஆங்கிலத்தில் 90%, கணிதத்தில் 96%, அறிவியலில் 95%, சமூக அறிவியலில் 95% மதிப்பெண்களையும் பெற்று சாதனை படைத்து பள்ளிக்கு பெருமை சேர்த்தனர். வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளை பள்ளியின் தாளாளர் சேக் செய்யது அலி, பள்ளி முதல்வர் சமீமா பர்வீன் ஆகியோர் பாராட்டி வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

The post சிபிஎஸ்இ பிளஸ் 2 பொதுத்தேர்வில் ட்ரஷர் ஐலண்ட் பள்ளி 100 சதவீதம் தேர்ச்சி appeared first on Dinakaran.

Related Stories: