தொடர்ந்து, ‘‘அதிமுகவை பிளவுபடுத்தும் வேலையை பாஜவே செய்யும் என்று அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளாரே?’’ என்று நிருபர்கள் கேட்க, இதற்கு செல்லூர் ராஜூ நேரடி பதில் தராமல், ‘‘அதிமுக பிளவுபட்டா இருக்கு? ஏம்ப்பா… பிளவுபட்டா இருக்கு? பிளவு பட்டாப்பா இருக்கு?’’ என்று, தன்னைச் சுற்றி இருந்த அத்தனை பேரையும் திரும்பிப் பார்த்து கேள்வி கேட்டார்.
பிறகு, ‘‘எல்லோரும் ஒற்றுமையாகத்தான் இருக்கோம். ஒன்றிரண்டு பேர் போவாங்க தம்பி. ஆலமரத்துல வெயில் காலத்தில் நிறைய இலைகள் உதிரும். திரும்பவும் தளுக்கும். வேப்பமரம் ஒரு நேரத்தில் கருகிப்போயிருக்கும். அதுமாதிரி ஒரு சமயத்துல அதிமுகவை நினைச்சாங்க… இது ஈடேறாதுன்னு. எடப்பாடி பழனிசாமி கட்சியை வீர, விவேக செயல்பட்டால் நிமிர்த்திக் காட்டிட்டாரு’’ என்றார்.
The post விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டு இருக்கணும்… ஆலமரம் உதிரும்… வேப்பமரம் கருகும்… செல்லூர் ராஜூவின் அட்வைஸ்… பஞ்ச்… appeared first on Dinakaran.