டூவீலரில் வந்து ஆட்டை கடத்தும் கும்பல்

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை சுண்ணாம்புக்காரத்தெரு ஆற்றங்கரை பகுதியை சேர்ந்தவர் சரண்யா (30). பூ வியாபாரி. இவர், வீட்டில் கட்டியிருந்த ஆடு திருடு போனது. இதுதொடர்பாக அந்த பகுதியில் இருந்த சிசிடிவி காட்சிகள் வைரலானது. இதுதொடர்பாக பட்டுக்கோட்டை குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தியதில், ஆட்டை திருடியவர்கள் அணைக்காடு கிராமத்தை சேர்ந்த ஜெய்சிங் (32), சுரேஷ் (25) என தெரிய வந்தது. இதுகுறித்து போலீசார் வழக்கு பதிந்து இருவரையும் நேற்று கைது செய்து அவர்களிடமிருந்து ஆட்டை பறிமுதல் செய்தனர்.

The post டூவீலரில் வந்து ஆட்டை கடத்தும் கும்பல் appeared first on Dinakaran.

Related Stories: