ராகுல் காந்தி மீது தேர்தல் ஆணையத்தில் ஒன்றிய அமைச்சர் புகார்

மும்பை: மக்களவை தேர்தல் நடந்து வரும் நிலையில் ஆளும் பாஜ மற்றும் பிரதான எதிர்கட்சியான காங்கிரஸ் கட்சியும் தங்களது தேர்தல் பிரசாரங்களில் ஒன்றை ஒன்று விமர்சித்து வருகின்றன. காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி தனது பிரசாரங்கள், பாஜ மீண்டும் ஆட்சிக்கு வந்தால் அரசியலமைப்பை மாற்ற விரும்புவதாக கூறி விமர்சித்து வருகிறார்.

இதற்கு சமூக நீதித்துறை அமைச்சர் மற்றும் இந்திய குடியரசு கட்சியின் தலைவரான ராம்தாஸ் அத்வாலே கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும் அமைச்சர் அத்வாலே கூறுகையில், ‘‘ராகுல் அடிக்கடி கூறுவது குறித்து தேர்தல் ஆணையத்தில் புகார் கொடுத்துள்ளேன். இதுபோன்று அவர் பேசுவதை தடை செய்ய வேண்டும் அல்லது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.

The post ராகுல் காந்தி மீது தேர்தல் ஆணையத்தில் ஒன்றிய அமைச்சர் புகார் appeared first on Dinakaran.

Related Stories: