கடப்பாக்கம் குப்பம் பகுதியில் பாண்டிச்சேரி சாராயத்தை கடத்திவந்து விற்பனை செய்து வந்த சக்திவேல் (32) என்பவரை கைது செய்து அவரிடம் இருந்து 20 சாராய பாட்டில்கள் பறிமுதல் செய்தனர். தொழுப்பேடு, சூனாம்பேடு சாலையில் வாகன சோதனையில் நடத்தியபோது பைக்கில் வந்த சூனாம்பேடு கிராமத்தை சேர்ந்த தமிழ்வேந்தனிடம் இருந்து 144 பாண்டிச்சேரி மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர். முன்னதாக போலீசாரை பார்த்ததும் பைக்கை விட்டுவிட்டு தமிழ்வேந்தன் தப்பிவிட்டார். சிறுமையிலூர் கிராமத்தில் கள் விற்பனையில் ஈடுபட்ட பிரியா (32), தேன்பாக்கத்தில் கள் விற்பனையில் ஈடுபட்ட சாந்தி (50) ஆகியோரை கைது செய்தனர். பின்னர் இவர்கள் அனைவரையும் மதுராந்தகம் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி மதுராந்தகம், புழல் சிறைகளில் அடைத்தனர்.
The post புதுச்சேரி மது, கள் விற்பனை: 3 பெண்கள் உள்பட 4 பேர் கைது appeared first on Dinakaran.