சென்னை ராயபுரம் அருகே வாகன ஓட்டியின் கழுத்தில் கேபிள் வயர் சிக்கி விபத்து!

சென்னை: சென்னை ராயபுரம் கல்மண்டபம் பிரதான சாலையின் நடுவே தொங்கிக் கொண்டிருந்த தனியார் இண்டர்நெட் கேபிள்களில் இருசக்கர வாகனத்தில் சென்றவர் சிக்கி கீழே விழுந்த நிலையில், அவ்வழியே வந்த மாநகர பேருந்து ஓட்டுநர் தக்க நேரத்தில் பேருந்தை நிறுத்தியதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. கழுத்தில் கேபிள் வயர் சிக்கியதில் நிலைதடுமாறி விழுந்த போது பேருந்தின் அடியில் சென்றுள்ளார். பின்னர் கீழே விழுந்த இளைஞரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

அங்கிருந்தவர்களின் உதவியோடு போக்குவரத்து போலீசார் கேபிள்களை அகற்றினர். இருப்பினும் நல்வாய்ப்பாக லேசான காயங்களுடன் இளைஞர் உயிர் தப்பினார். தனியார் இணைய சேவை நிறுவனத்தின் கேபிள் வயர்கள் சாலையின் குறுக்கே தொங்கியதால் விபத்து ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த விபத்து தொடர்பாக ராயபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சம்மந்தபட்ட தனியார் நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

The post சென்னை ராயபுரம் அருகே வாகன ஓட்டியின் கழுத்தில் கேபிள் வயர் சிக்கி விபத்து! appeared first on Dinakaran.

Related Stories: