இதுபற்றி தகவல் கிடைத்ததும் கோயம்பேடு அனைத்து மகளிர் போலீசார் விரைந்துவந்தனர். பொதுமக்கள் தாக்கியதில் படுகாயம் அடைந்த வாலிபரை மீட்டு கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. மேலும் இதுசம்பந்தமாக பாதிக்கப்பட்ட ஆசிரியை கொடுத்த புகாரில், ‘’கோயம்பேடு பகுதியில் வசிக்கிறேன். ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறேன். எனது வீட்டில் புகுந்த வாலிபர், எனது கழுத்தில் கத்தி வைத்து மிரட்டி வாயை மூடி பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றார். எனவே, அந்த வாலிபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று தெரிவித்துள்ளார். இதன் அடிப்படையில், அனைத்து மகளிர் போலீசார் விசாரணை நடத்தினர். இதையடுத்து ஆசிரியையிடம் தவறாக நடக்க முயன்ற கோயம்பேடு பகுதியை சேர்ந்த ஜான்பால்ராஜ்(37) கைது செய்தனர்.
போலீசாரிடம் ஜான்பால்ராஜ் கூறும்போது,’’ இரவு நேரங்களில் தனியாக இருக்கும் பெண்களை நோட்டமிட்டு அந்த வீட்டுக்குள் புகுந்து பெண்களுக்கு பாலியல் தொந்தரவு கொடுப்பேன். கோயம்பேடு பகுதியில் வீட்டில் கதவு திறந்திருந்ததால் உள்ளே புகுந்து அங்கு தூங்கிக்கொண்டிருந்த பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு கொடுக்க முயன்றபோது கூச்சலிட்டதால் ஆட்கள் வந்து பிடித்து அடித்து உதைத்துவிட்டனர்’’ என்றார். இதையடுத்து கொலை மிரட்டல், பெண் வன்கொடுமை மற்றும் அத்துமீறி உள்ளே புகுந்தது உட்பட 3 பிரிவின் கீழ் வழக்குபதிவு செய்தனர். அவரிடம் இருந்து கத்தியை பறிமுதல் செய்து எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.
The post வீட்டில் தனியாக தூங்கிக்கொண்டிருந்த ஆசிரியையிடம் சில்மிஷம் செய்த வாலிபருக்கு சரமாரி தர்மஅடி: கோயம்பேட்டில் பரபரப்பு appeared first on Dinakaran.