மத்திய பிரதேச மாநிலம் ஜபல்பூர் மாவட்டத்தில் டிராக்டர் கவிழ்ந்து விபத்து: சிறுவர்கள் உட்பட 5 பேர் பலி

மத்திய பிரதேசம்: மத்திய பிரதேச மாநிலம் ஜபல்பூர் மாவட்டத்தில் டிராக்டர் கவிழ்ந்து விபத்துகுள்ளானதில் சிறுவர்கள் உட்பட 5 பேர் உயிரிழந்துள்ளனர். மத்திய பிரதேச மாநிலம் ஜபல்பூர் மாவட்டத்தில் தர்மேந்திர தாக்கூர் என்ற இளைஞர் திருமண நிகழ்வுக்கு டிராக்டரில் தண்ணீர் கொண்டு சென்று கொண்டிருந்தார். டிராக்டரில் மேலும் 6 சிறுவர்கள் உடன் இருந்தனர்.

அப்போது டிராக்டர் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் டிராக்டரை ஓட்டிச்சென்றவர் மற்றும் 4 சிறுவர்கள் என மொத்தம் 5 பேர் உயிரிழந்தனர். மேலும் 2 சிறுவர்கள் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

ஓட்டுநரின் கவனக்குறைவால் விபத்து ஏற்பட்டுள்ளதாக போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த விபத்து தொடர்பாக மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் மத்தியப் பிரதேச முதல்வர் மோகன் யாதவ் கூறுகையில், “ஜபல்பூரில் டிராக்டர் கவிழ்ந்ததில் ஐந்து பழங்குடியின குழந்தைகள் இறந்துள்ளனர், சிலர் காயமடைந்துள்ளனர். அனைத்து குழந்தைகளுக்கும் தலா 2 லட்சம் ரூபாய் நிவாரணம் தொகை வழங்க கலெக்டருக்கு உத்தரவிட்டுள்ளேன் என்று கூறியுள்ளார்.

The post மத்திய பிரதேச மாநிலம் ஜபல்பூர் மாவட்டத்தில் டிராக்டர் கவிழ்ந்து விபத்து: சிறுவர்கள் உட்பட 5 பேர் பலி appeared first on Dinakaran.

Related Stories: