கரூர் மாவட்ட காங்கிரஸ் சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு விழா

கரூர், மே 4: கரூர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் தாந்தோன்றி மலையில் பொதுமக்களின் தாகத்தை தணிக்கும் பொருட்டு தண்ணீர் பந்தல் திறப்பு விழா நடைபெற்றது. விழாவில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட ஏஐசிசி உறுப்பினரும், தேசிய ஒருங்கிணைப்பாளருமான பேங்க் சுப்ரமணியன் திறந்து வைத்து பொதுமக்களுக்கு தர்பூசணி மோர் மற்றும் தண்ணீர் வழங்கினார். நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளர் திருகாம்புலியூர் சேகர், துணைத்தலைவர் சின்னையன், வட்டாரத் தலைவர்கள் ராஜேந்திரன், விசுவை செந்தில்குமார், கரூர் நகர முன்னாள் தலைவர் சுப்பன், ஓ பி சி மாநில துணைத்தலைவர் தக்ஷிணாமூர்த்தி, ஆர்டிஐ மாநில பொதுச் செயலாளர் ஜி பி எம் மனோகரன், மாநில பொதுச் செயலாளர் சசிகுமார், மாவட்ட தொழில்நுட்ப தலைவர் போட்டோ பாலு, சம்பத், பெருமாள், பரமசிவம், முத்துசாமி செல்வராஜ், வழக்கறிஞர் ரவிச்சந்திரன், நாச்சிமுத்து மற்றும் பலர் திரளாக கலந்து கொண்டனர்.

The post கரூர் மாவட்ட காங்கிரஸ் சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு விழா appeared first on Dinakaran.

Related Stories: