பாடாலூர், மே 1: பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா செட்டிகுளம் கிராமத்தில் பிரசித்தி பெற்ற காமாட்சி அம்பாள் சமேத ஏகாம்பரேஸ்வரர் கோயில் உள்ளது. இங்கு காமாட்சி அம்பாள் சன்னதிக்கு எதிரில் மகா குபேரனுக்கு தனி சன்னதி உள்ளது. மேலும் கோயிலில் 12 ராசிகள், 27 நட்சத்திரங்களுக்குமான குபேரன் மீன ஆசனத்தில் வீற்றிருக்குமாறு, கல் தூண்களின் சிற்பங்களில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இன்று மாலை 5.21 மணியளவில் குரு பகவான் மேஷ ராசியில் இருந்து ரிஷப ராசிக்கு இடம் பெயர்கிறார். ரிஷபம், மிதுனம், சிம்மம், துலாம், தனுசு, கும்பம், மீனம் ராசிக்காரர்கள் பரிகாரம் செய்ய வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. குருப்பெயர்ச்சியையொட்டி செட்டிகுளம் ஏகாம்பரேஸ்வரர் கோயிலில் இன்று மாலை சிறப்பு பரிகார அபிஷேகம், ஆராதனை நடக்கிறது.
The post செட்டிகுளம் ஏகாம்பரேஸ்வரர் கோயிலில் இன்று குருப்பெயர்ச்சி விழா appeared first on Dinakaran.