வாரிசு சான்றிதழ் பெற மே 12க்குள் விண்ணப்பிக்கலாம்: இஎஸ்ஐ தகவல்

சென்னை: காப்பீட்டாளர் வாரிசு சான்றிதழ் பெற மே 12ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என இஎஸ்ஐ தெரிவித்துள்ளது. இது குறித்து இஎஸ்ஐ சென்னை மண்டல இயக்குநர் வெளியிட்ட அறிக்கை: இஎஸ்ஐ மருத்துவக் கல்லூரிகள் மற்றும் சில அரசு மருத்துவக் கல்லூரிகளில், இஎஸ்ஐ காப்பீட்டாளருக்கான ஒதுக்கீட்டின் கீழ் எம்பிபிஎஸ், பிடிஎஸ், பி.எஸ்சி நர்சிங் பட்டப்படிப்புகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் இஎஸ்ஐ காப்பீட்டாளர்களின் பிள்ளைகள், காப்பீட்டாளரின் வாரிசு என்ற சான்றிதழ் பெறுவதற்கு www.esic.gov.in என்ற இணையதளத்தின் மூலமாக வரும் மே 12க்கு முன்பு விண்ணப்பிக்க வேண்டும்.

இஎஸ்ஐ காப்பீட்டாளர் ஒதுக்கீட்டின் கீழ் தமிழ்நாட்டிலுள்ள 50 இடங்கள் (இ.எஸ்.ஐ மருத்துவக் கல்லூரி கே.கே.நகர்-30, அரசு மருத்துவக் கல்லூரி கோயம்புத்தூர் -20) உட்பட 466 எம்பிபிஎஸ் இடங்கள், 28 பிடிஎஸ், 60 பி.எஸ்சி நர்சிங் இடங்களுக்கு தேசிய அளவில் விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு அருகிலுள்ள இஎஸ்ஐ கிளை அலுவலகம், துணை மண்டல அலுவலகம் அல்லது மண்டல அலுவலகத்தை அணுகலாம். 044 28306333, 044-28306363 என்ற தொலைபேசி எண்களிலும் தொடர்பு கொள்ளலாம்.

The post வாரிசு சான்றிதழ் பெற மே 12க்குள் விண்ணப்பிக்கலாம்: இஎஸ்ஐ தகவல் appeared first on Dinakaran.

Related Stories: