சென்னை விமான நிலையத்தில் அவருக்கு உர்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. செய்தியாளர்களிடம் பேசிய அவர் சர்வதேச பாய்மரப்படகு போட்டி வரைபடத்தில் இந்தியா இடம் பெற்றது மகிழ்ச்சி என்றார். 2வது முறையாக ஒலிம்பிக்கில் விளையாட இருப்பது மகிழ்ச்சியளிப்பதாக தெரிவித்த நேத்ரா பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் தன்னால் முடிந்த அளவு சிறப்பாக செயல்பட முயற்சிப்பேன் என்றும் தெரிவித்தார். கடந்த சில ஆண்டுகளாக நேத்ராவிற்கு தமிழ்நாடு அரசு நல்ல ஒத்துழைப்பு அளித்து வருவதாகவும் இது அவரது வெற்றிக்கு பெருமளவு கைகொடுப்பதாகவும் அவரது தந்தை குமணன் தெரிவித்தார்.
The post பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வெல்ல முயற்சிப்பேன்: பாய்மரப்படகு போட்டி வீராங்கனை நேத்ரா குமணன் நம்பிக்கை appeared first on Dinakaran.