விவிபேட் தொடர்பான மனு: உச்ச நீதிமன்றம் தள்ளுபடி

புதுடெல்லி: மின்னணு வாக்கு இயந்திரத்தில் பதிவான வாக்குகளையும், ஒப்புகை சீட்டு இயந்திரத்தின் (விவிபேட்) வாக்குகளையும் நூறு சதவீதம் முழுமையாக சரிபார்க்கக் கோரிய மனுக்களை உச்ச நீதிமன்றம் கடந்த 26ம் தேதி தள்ளுபடி செய்தது. எல்லா ஒப்புகை சீட்டுக்களையும் எண்ண முடியாது என்றும், மீண்டும் வாக்கு சீட்டு முறைக்கு மாற முடியாது என்றும் நீதிபதிகள் தீர்ப்பில் குறிப்பிட்டனர்.

இந்நிலையில், விவிபேட் சீட்டுகளை முழுமையாக எண்ணக் கோரிய மற்றொரு மனு நீதிபதிகள் பி.ஆர்.கவாய் மற்றும் சந்தீப் மேத்தா ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், ஏற்கனவே இதுதொடர்பான வழக்கில் தீர்ப்பளிக்கப்பட்டிருப்பதால் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

The post விவிபேட் தொடர்பான மனு: உச்ச நீதிமன்றம் தள்ளுபடி appeared first on Dinakaran.

Related Stories: