மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 913 புள்ளிகள் உயர்வு..!!

மும்பை: வர்த்தகம் தொடங்கியதில் இருந்தே ஏற்றத்துடன் காணப்பட்ட பங்குச்சந்தை குறியீட்டு எண்கள் 1% க்கு மேல் உயர்ந்து முடிவடைந்தன. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 913 புள்ளிகள் உயர்ந்து 74,643 புள்ளிகளானது. வர்த்தகம் நிறைவடையும் முன் சென்செக்ஸ் 990.99 புள்ளிகள் அதிகரித்து 74,721 புள்ளிகளைத் தொட்டு இறங்கியது. சென்செக்ஸ் பட்டியலில் உள்ள 30 நிறுவனங்களில் 26 நிறுவனங்களின் பங்குகள் விலை உயர்ந்து வர்த்தகமாயின. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 223 புள்ளிகள் அதிகரித்து 22,643 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவு பெற்றது. வர்த்தகம் நிறைவடையும் முன் நிஃப்டி 235.85 புள்ளிகள் உயர்ந்து 22,655.80 புள்ளிகளைத் தொட்டு இறங்கியது. நிஃப்டி பட்டியலில் உள்ள 50 நிறுவனங்களில் 32 நிறுவனங்களின் பங்குகள் விலை உயர்ந்து விற்பனையாயின.

The post மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 913 புள்ளிகள் உயர்வு..!! appeared first on Dinakaran.

Related Stories: