மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 260 புள்ளிகள் உயர்வு..!!

மும்பை: சரிவுடன் தொடங்கி, ஏற்ற இறக்கங்களுடன் காணப்பட்ட பங்குச்சந்தை குறியீட்டு எண்கள் உயர்ந்து முடிந்துள்ளது. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 260 புள்ளிகள் உயர்ந்து 72,664 புள்ளிகளானது. காலை வர்த்தகத்தின்போது சென்செக்ஸ் 542 புள்ளிகள் உயர்ந்து 72,906 புள்ளிகளைத் தொட்ட போதிலும் பின்னர் சரிந்தது. சென்செக்ஸ் பட்டியலில் உள்ள 30 நிறுவனங்களில் 20 நிறுவனங்களின் பங்குகள் விலை உயர்ந்து வர்த்தகமாயின. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 98 புள்ளிகள் அதிகரித்து 22,055 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவு பெற்றது.

The post மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 260 புள்ளிகள் உயர்வு..!! appeared first on Dinakaran.

Related Stories: