தங்கம் விலையில் தொடர்ந்து மாற்றம் 3 நாட்களில் சவரன் ரூ.640 குறைந்தது: நகை வாங்குவோர் மகிழ்ச்சி

சென்னை: தங்கம் விலை தொடர்ந்து 3 நாட்களில் சவரனுக்கு ரூ.640 குறைந்துள்ளது. இந்த விலை குறைவு நகை வாங்குவோருக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தங்கத்தின் விலை கடந்த மாதம் கிடுகிடுவென அதிகரித்து ஒரு சவரன் ரூ.55 ஆயிரத்தை கடந்து புதிய உச்சத்தை தொட்டது. நடுத்தர மற்றும் ஏழை, எளிய மக்களுக்கு எட்டாக் கனியாகிவிடும் என்று நினைக்கத் தோன்றும் அளவுக்கு தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்தது. புதிய உச்சத்தை தொட்ட பின்னர், தங்கம் விலையில் மாற்றம் ஏற்பட்டது. அதாவது விலை குறைவதும், அதிகரிப்பதுமாக இருந்து வருகிறது. இந்த நிலையில் கடந்த 10ம் தேதி அட்சயதிருதியை அன்று சவரனுக்கு ரூ.1240 வரை உயர்ந்து, ஒரு சவரன் ரூ.54,160க்கு விற்பனையானது.

தொடர்ந்து 11ம் தேதி தங்கம் விலை சவரனுக்கு ரூ.160 குறைந்து ஒரு சவரன் ரூ.54,000க்கு விற்பனையானது. 12ம் தேதி ஞாயிற்றுக்கிழமை தங்கம் மார்க்கெட்டுக்கு விடுமுறை ஆகும். அதனால் தங்கம் விலையில் மாற்றம் ஏற்படவில்லை.
தொடர்ந்து நேற்று முன்தினம் தங்கம் விலை கிராமுக்கு ரூ.25 குறைந்து ஒரு கிராம் ரூ.6,725க்கும், சவரனுக்கு ரூ.200 குறைந்து ஒரு சவரன் ரூ.53,800க்கு விற்கப்பட்டது. தொடர்ந்து நேற்றும் தங்கம் விலையில் மாற்றம் காணப்பட்டது. அதாவது, கிராமுக்கு ரூ.35 குறைந்து ஒரு கிராம் ரூ.6,690க்கும், சவரனுக்கு ரூ.280 குறைந்து ஒரு சவரன் ரூ.53,320க்கும் விற்கப்பட்டது. அதே நேரத்தில் தொடர்ச்சியாக 3 நாட்களில் மட்டும் தங்கம் விலை சவரனுக்கு ரூ.640 குறைந்துள்ளது. தங்கம் விலை தொடர்ந்து குறைந்து வருவது நகை வாங்குவோரை மகிழ்ச்சியடைய செய்துள்ளது.

The post தங்கம் விலையில் தொடர்ந்து மாற்றம் 3 நாட்களில் சவரன் ரூ.640 குறைந்தது: நகை வாங்குவோர் மகிழ்ச்சி appeared first on Dinakaran.

Related Stories: