தர்மபுரி அருகே மாஜி ராணுவ வீரர் மர்மச்சாவு உடலை மீட்டு விசாரணை

தர்மபுரி, ஏப்.26: தர்மபுரி அருகே, மர்மமான முறையில் உயிரிழந்த மாஜி ராணுவ வீரர் உடலை கைப்பற்றி போலீசார் விசாரித்து வருகின்றனர். தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு செல்லியம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் மகிமைநாதன்(49), முன்னாள் ராணுவ வீரரான இவர், கடந்த 23ம் தேதி ஊரில் நடந்த துக்க நிகழ்ச்சியில் கலந்து கொண்டு விட்டு, இரவு வீட்டுக்கு வந்துள்ளார். அப்போது, அவர் அதிகளவில் மது அருந்தி இருந்ததாக தெரிகிறது. பின்னர் தனது அறைக்கு படுக்க சென்ற அவர், மறுநாள் காலை வெகுநேரமாகியும் எழுந்திருக்கவில்லை. இதனால், சந்தேகமடைந்த குடும்பத்தினர் அவரது அறையின் கதவை தட்டியும் திறக்காததால், உடைத்துக்கொண்டு உள்ளே சென்றனர். அப்போது, அங்கு மகிமைநாதன் மயங்கிய நிலையில் கிடந்தார். உடனடியாக அவரை மீட்டு தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கிருந்த மருத்துவர்கள் பரிசோதித்து பார்த்து விட்டு, அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். தகவல் அறிந்த பாலக்கோடு போலீசார் மகிமைநாதன் உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து, விசாரித்து வருகின்றனர்.

The post தர்மபுரி அருகே மாஜி ராணுவ வீரர் மர்மச்சாவு உடலை மீட்டு விசாரணை appeared first on Dinakaran.

Related Stories: