கஞ்சா வைத்திருந்த 2 வாலிபர்கள் கைது

தர்மபுரி, ஏப்.24:பாப்பாரப்பட்டி எஸ்ஐ மாரி தலைமையிலான போலீசார், வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பாப்பாரப்பட்டி மின்வாரிய அலுவலகம் அருகே டூவீலரில் 2 வாலிபர்கள் சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் நின்று கொண்டிருந்தனர். அவர்களை போலீசார் அழைத்து விசாரித்ததில், அவர்கள் பென்னாகரம் கிட்டம்பட்டியை சேர்ந்த தமிழரசன் (23), கார்த்திகேயன் (18) என்பது தெரியவந்தது. அவர்கள் வைத்திருந்த பையில் சோதனை செய்ததில் 3 கிலோ கஞ்சா இருந்தது. இதன் மதிப்பு ₹45 ஆயிரம் ஆகும். இதையடுத்து அவர்களை போலீசார் கைது செய்து, கடத்தலுக்கு பயன்படுத்திய டூவீலரை பறிமுதல் செய்தனர்.

The post கஞ்சா வைத்திருந்த 2 வாலிபர்கள் கைது appeared first on Dinakaran.

Related Stories: