தேர்தல் முடிந்துள்ள நிலையில் 5 வாரத்துக்கு பின் கோட்டைக்கு வந்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

சென்னை: தமிழகத்தில் கடந்த 19ம் தேதி நாடாளுமன்ற தேர்தல் முடிந்துள்ள நிலையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று கோட்டைக்கு வந்தார். தமிழகத்தில் மொத்தமுள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கான வாக்குப்பதிவு கடந்த 19ம் தேதி ஒரே கட்டமாக நடந்து முடிந்துள்ளது. முன்னதாக கடந்த மார்ச் 16ம் தேதி நாடாளுமன்ற தேர்தல் குறித்த அறிவிப்பை இந்திய தலைமை தேர்தல் ஆணையம் வெளியிட்டது. தேர்தல் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து, நடத்தை விதிமுறைகள் மார்ச் 16ம் தேதி முதல் அமலுக்கு வந்தது. அதன்படி மாநில முதல்வர், அமைச்சர்கள் தலைமை செயலகம் வந்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தவோ, புதிய திட்டங்கள் எதுவும் அறிவிக்க கூடாது என்பது விதி. அதன்படி தமிழ்நாடு முதல்வர் கடந்த மார்ச் 15ம் தேதிக்கு பிறகு, கோட்டைக்கு வரவில்லை. தொடர்ந்து தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வந்தார். இந்நிலையில் தற்போது தேர்தல் முடிந்துள்ள நிலையில் சுமார் 5 வாரங்களுக்கு பிறகு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று காலை 10.45 மணிக்கு சென்னை கோட்டையில் உள்ள அவரது அலுவலகத்துக்கு வந்தார். மதியம் 12.30 மணி வரை அலுவலகத்தில் இருந்துவிட்டு புறப்பட்டு சென்றார். அதேபோன்று அமைச்சர் தங்கம் தென்னரசு உள்ளிட்ட சில அமைச்சர்களும் நேற்று தலைமை செயலகம் வந்திருந்தனர்.

The post தேர்தல் முடிந்துள்ள நிலையில் 5 வாரத்துக்கு பின் கோட்டைக்கு வந்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின் appeared first on Dinakaran.

Related Stories: