ஜூன் 4ம் தேதி நடைபெறும் வாக்கு எண்ணிக்கைக்கு பிறகு நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்படும். மத்தியில் இந்தியா கூட்டணி ஆட்சி அமைக்கும். பாஜ கூட்டணி மூன்றாவது முறையாக மத்தியில் ஆட்சி அமைப்பது முற்றிலும் சாத்தியமில்லாத ஒன்று. தேர்தல் பிரச்சாரத்தின்போது, பாஜகவினர் கடந்த 10 ஆண்டுகளில் அவர்கள் செய்த நலத்திட்டங்களை கூறி வாக்குச்சேகரிக்காமல் மத கலவரத்தை ஏற்படுத்தினர். பாஜவினருக்கு நாட்டின் நலன் மீதும், மக்களின் நலன் மீதும் எந்தவித அக்கறையும் இல்லை. மதரீதியான குழப்பங்களை ஏற்படுத்தி, பிளவுப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுவருகின்றனர். குறுக்குவழி அரசியலில் பாஜ ஒருபோதும் வெற்றி பெறாது.
The post 40 தொகுதிகளிலும் நிச்சயம் இந்தியா கூட்டணி வெற்றி பெறும்: முத்தரசன் உறுதி appeared first on Dinakaran.