இதனால் அனைத்து டாஸ்மாக் கடைகளிலும் மது பிரியர்கள் நீண்ட வரிசையில் நின்றிருந்து சரக்குகளை வாங்கி சென்றனர். கடந்த 20ம் தேதி மட்டும் ரூ.298.34 கோடிக்கு மதுபானங்கள் விற்பனையாகி உள்ளது. அதிகபட்சமாக திருச்சி மண்டலத்தில் ரூ.66.38 கோடி, சென்னையில் ரூ.62.59 கோடிக்கு மது விற்பனை நடந்துள்ளது. இது தொடர்பாக அதிகாரிகள் கூறுகையில், பிரீமியம் வகை மதுபானங்கள் மீது அதிக ஆர்வம் ஏற்பட்டிருப்பதை பார்க்க முடிந்தது. 3 நாள் விடுமுறைக்கு பிறகு டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டன, மீண்டும் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால் அதிகம் கூட்டம் வரும் என எதிர்பார்த்தோம். இதற்காக அனைத்து டாஸ்மாக் கடைகளிலும் முன்கூட்டியே வழக்கத்தை விட அதிகமாக ஸ்டாக் வைத்து இருந்தோம் என தெரிவித்தனர்.
The post தமிழ்நாட்டில் கடந்த 20ம் தேதி ஒரே நாளில் ரூ.298 கோடிக்கு மதுபானங்கள் விற்பனை appeared first on Dinakaran.