அப்போது கபீர் நகரில் பிரசாரம் மேற்கொண்டிருந்த போது, திடீரென சிலர் சஞ்சய் நிஷாத்தை தாக்கினர். அதனால் மூக்கில் காயம் ஏற்பட்டது. அதிக ரத்தப்போக்கு ஏற்பட்டதால், அவரை அங்கிருந்து மீட்டு மாவட்ட மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு மூக்கில் கட்டு போட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
மேலும் மருத்துவமனையின் வெளியே அமர்ந்திருந்த அவர் கூறுகையில், ‘எனது மகனுக்காக பிரசாரம் செய்ய கபீர் நகருக்கு சென்றேன். அப்பகுதியை சேர்ந்த குறிப்பிட்ட சாதியினர், என் மீது தாக்குதல் நடத்தினர். அதனால் எனது மூக்கு உடைந்தது. இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக போலீசிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது’ என்றார்.
The post மகனுக்காக பிரசாரம் செய்த பாஜக அமைச்சரின் மூக்கு உடைப்பு: உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி appeared first on Dinakaran.