மணிப்பூர்: மணிப்பூரில் மக்களவை தேர்தலின் முதற்கட்ட வாக்குப்பதிவின்போது வன்முறை வெடித்த 11 வாக்குச்சாவடிகளில் நாளை (ஏப்ரல் 22) மறுவாக்குப்பதிவு நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. வாக்குப்பதிவு அன்று துப்பாக்கிச்சூடு நடந்த நிலையில், மீண்டும் தேர்தலுக்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.