இந்நிலையில், அபுதாபியில் இருந்து நேற்றிரவு சென்னைக்கு ஏர்அரேபியா ஏர்லைன்ஸ் விமானம் வந்தது. அதில் வந்த பயணிகளின் பாஸ்போர்ட் உள்பட ஆவணங்களை குடியுரிமை அதிகாரிகள் பரிசோதித்து அனுப்பி கொண்டிருந்தனர்.
அப்போது, தலைமறைவு குற்றவாளியான கவிக்குமாரும் வந்துள்ளார். அவரது பாஸ்போர்ட்டை ஆய்வு செய்தபோது தலைமறைவு குற்றவாளி என தெரிந்ததால் தனியறையில் அடைத்து வைத்தனர். பின்னர் புதுக்கோட்டை எஸ்பிக்கு தகவல் தெரிவித்தனர். அவரை கைது செய்ய போலீசார் சென்னைக்கு விரைந்துள்ளனர்.
The post மோசடி வழக்கில் தலைமறைவான புதுக்கோட்டை வாலிபர் கைது: அபுதாபியில் இருந்து சென்னை வந்தபோது சிக்கினார் appeared first on Dinakaran.