பண பலத்தை நம்பி தேர்தலில் நிற்கும் பாஜ: -எஸ்டிபிஐ தலைவர்

நெல்லை: திண்டுக்கல் மக்களவைத் தொகுதியில் அதிமுக கூட்டணி சார்பில் எஸ்டிபிஐ வேட்பாளராக அக்கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் போட்டியிடுகிறார். அவர் நேற்று நெல்லை மேலப்பாளையம் கணேசபுரம் வாக்குச் சாவடியில் வாக்களித்தார். பின்னர் அவர் அளித்த பேட்டி: மக்களின் பிரச்னைகளை பேசாமல், பணத்தை மட்டுமே நம்பி சில வேட்பாளர்கள் களத்தில் நிற்கின்றனர். மக்கள் இந்தத் தேர்தலில் பணபலத்தை முறியடிப்பர். பாஜ பண பலத்தை நம்பித்தான் இந்த தேர்தலில் நிற்கிறது.ஜனநாயக உரிமையை விலை கொடுத்து வாங்குவதை தேர்தல் ஆணையம் தடுத்திட வேண்டும் என்றார்.

The post பண பலத்தை நம்பி தேர்தலில் நிற்கும் பாஜ: -எஸ்டிபிஐ தலைவர் appeared first on Dinakaran.

Related Stories: