ரோட்ஷோவில் கூடிய கூட்டத்தால் நல்ல நேரத்தை தவற விட்ட பாஜ வேட்பாளர் சி.ஆர்.பாட்டீல்: இன்று வேட்பு மனு தாக்கல்

நவ்சாரி: பேரணியில் திரண்ட கூட்டத்தால் குஜராத் நவ்சாரி பாஜ வேட்பாளர் சி.ஆர்.பாட்டீல் வேட்பு மனு தாக்கல் செய்வதற்கான நல்ல நேரத்தை தவற விட்டார். குஜராத்தின் நவ்சாரி தொகுதியில் தற்போதைய மக்களவை உறுப்பினர் சி.ஆர்.பாட்டீல் பாஜ வேட்பாளராக மீண்டும் போட்டியிடுகிறார்.

வேட்பாளர்கள் அனைவரும் மதியம் 12.39 மணிக்கு வேட்பு மனு தாக்கல் செய்ய விரும்புகின்றனர். இதற்கு காரணம் வெற்றி கிடைக்கும் என அவர்கள் நம்புகின்றனர். அதன்படி சி.ஆர்.பாட்டீல் நேற்று மதியம் 12.39 மணிக்கு நவ்சாரி ஆட்சியர் அலுவலகத்தில் மனு தாக்கல் செய்ய திட்டமிட்டிருந்தார். இதற்காக தன் கட்சி அலுவலகத்தில் இருந்து ஆட்சியர் அலுவலகம் வரை பேரணிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்த பேரணியில் முதல்வர் பூபேந்திர படேல், பாஜ தலைவர்கள், கட்சியினர் கலந்து கொண்டனர். மேலும் பாட்டீலுக்கு வாழ்த்து தெரிவிக்க ஏராளமான தொண்டர்களும், பொதுமக்களும் கலந்து கொண்டதாகவும் கூறப்படுகிறது. இந்த நெரிசலில் சிக்கியதால் சி.ஆர்.பாட்டீலால் சரியான நேரத்தில் ஆட்சியர் அலுவலகத்தை அடைய முடியவில்லை. இதையடுத்து நல்ல நேரத்தை தவற விட்ட சி.ஆர்.பாட்டீல் இன்று வேட்பு மனு தாக்கல் செய்ய உள்ளார்.

The post ரோட்ஷோவில் கூடிய கூட்டத்தால் நல்ல நேரத்தை தவற விட்ட பாஜ வேட்பாளர் சி.ஆர்.பாட்டீல்: இன்று வேட்பு மனு தாக்கல் appeared first on Dinakaran.

Related Stories: